search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடும் எதிர்ப்பு"

    • கன்னடர்களின் நலனைக் கவனிப்பதே எங்கள் முன்னுரிமை என்றார்.
    • தொழில்துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நிறுத்தி வைப்பு.

    கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    கடந்த திங்கள் அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    அவரின் எக்ஸ் பதிவில், "கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

    கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், கன்னடர்கள் 'கன்னட நிலத்தில்' வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே தனது அரசின் விருப்பம். நாங்கள் கன்னடர்களுக்கு ஆதரவான அரசு. கன்னடர்களின் நலனைக் கவனிப்பதே எங்கள் முன்னுரிமை" என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு தனியார் நிறுவனங்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தன. இந்த முடிவு பாரபட்சமானது. பிற்போக்குத்தனமானது, பாசிச மசோதா என விமர்சித்தன. இதனால் சித்தராமையா அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.

    இந்த மசோதா நாளை கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, "கர்நாடக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    தொழில்துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், வரும் நாட்களில் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் எக்ஸ் பக்கத்தில் முதல்வர் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.

    • இந்துக்களின் உணர்வுகளை ராகுல் புண்படுத்துகிறார்.
    • அம்பானி, அதானி பேசிய பகுதிகளும் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் கடந்த 24-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 28-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

    ஆனால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அந்த விவாதத்தை தொடங்க முடியவில்லை. இந்தநிலையில் பாராளுமன்ற மக்களவையில் நேற்று இந்த விவாதம் தொடங்கியது.

    மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விவாதத்தில் பங்கேற்று சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மீதும், பா.ஜ.க. தலைவர்கள் மீதும் ஆவேசமாக சுமத்தினார்.

    அவரது ஆவேச பேச்சுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோர் உடனுக்குடன் பதிலடி கொடுத்தனர். இதன் காரணமாக பாராளுமன்றத்தில் நேற்று விவாதத்தில் அனல் பறந்தது.

    ராகுல்காந்தி பேசும் போது, "இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் எந்த நேரமும் பயம், வன்முறை, வெறுப்புணர்வு, பொய்கள் பற்றியே பேசுகிறார்கள். அவர்கள் இந்துக்கள் என்று சொல்ல முடியாது" என்றார். அவர் அப்படி பேசும்போது பா.ஜ.க. எம்.பி.க்களை பார்த்து கைநீட்டி குறிப்பிட்டு பேசினார்.

    இதற்கு பிரதமர் மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பதில் அளித்து பேசுகையில், "ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தை வன்முறையாளர்கள் என்று சொல்வது தீவிரமான விஷயம் ஆகும்" என்றார்.

    அதேபோல மத்திய மந்திரி அமித்ஷாவும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில், "கோடிக் கணக்கான இந்துக்களின் உணர்வுகளை ராகுல் புண்படுத்துகிறார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார்.

    ராகுல் தனது பேச்சின் போது அக்னிவீர் திட்டம் பற்றியும் கடுமையாக குறைகூறி பேசினார். மேலும் தொழில் அதிபர்கள் அம்பானி, அதானி பற்றியும் குறிப்பிட்டார். இந்த பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ராகுல்காந்தியின் பேச்சு பற்றி சபாநாயகர் ஓம்பிர்லா ஆய்வு நடத்தினார். ராகுல் காந்தியின் பேச்சு சபை விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.

    இதையடுத்து ராகுல் காந்தி நேற்று விவாதத்தின் போது பேசிய பேச்சில் ஒரு பகுதியை நீக்குவதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா முடிவு செய்தார். அதன்படி ராகுல் காந்தி பேச்சின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. இன்று காலை அதுபற்றிய தகவல்கள் வெளியானது.

    இந்துக்களை தொடர்புபடுத்தி ராகுல்காந்தி பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் குறித்தும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். குறித்தும் அவர் முன்வைத்த விமர்சனங்கள் நீக்கப்பட்டன. அதுபோல அக்னிவீர் திட்டம் பற்றி அவர் குறைகூறி இருக்கும் பகுதியும் நீக்கப்பட்டது.

    • கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பி உள்ளது.
    • டெக்சாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது.

    ஒரு கம்பெனிக்கு விளம்பர தூதுவராக ஒப்பந்தமான பிரபல பாலிவுட் சீனியர் நடிகை மாதுரி தீட்சித் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் ஆகஸ்டு மாதத்தில் தனது கம்பெனிகளின் விளம்பரத்திற்காக டெக்சாசில் பிரமாண்டமான ஒரு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.

    இந்த கம்பெனியின் விளம்பரதாரரான மாதுரி தீட்சித் டெக்சாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தெரிவித்து உள்ளார்.

    ஆனால் அந்த தொழில் அதிபர் பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்பு வைத்து இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் இந்திய அரசாங்கம் அவர் நடத்தும் நிறுவனங்களை பிளாக் லிஸ்டில் வைத்தது.

    அந்த நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாதுரி தீட்சித் மீது சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பி உள்ளது.

    பாகிஸ்தான் தொழில் அதிபரின் பின்புலம் என்ன என்று தெரிந்து கொள்ளாமலேயே அந்த நிறுவனத்திற்கு விளம்பரதாரராக எப்படி நீங்கள் இருக்கலாம். டெக்சாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது என்று வலைத்தளத்தில் பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழக அரசு தொழில் துறையின் மூலம், சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க நிலம் எடுப்பு பணிக்காக சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில், வளையப்பட்டி, அரூர் பஞ்சாயத்துக்களில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. அரூர் பஞ்சாயத்தில், கடந்த ஜனவரி 26-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில், சிப்காட் அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய கிராம பஞ்சாயத்துக்களுக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசு தொழில் துறையின் மூலம், சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க நிலம் எடுப்பு பணிக்காக சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சிப்காட் அமைக்க எதிர்ப்பு

    சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சிப்காட் எதிர்ப்பு குழு சார்பில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில், விளை நிலங்களில் சிப்காட் வருவதை தவிர்க்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, சம்பந்தப்பட்ட 5 கிராம பஞ்சாயத்து தலைவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில், வளையப்பட்டி, அரூர் பஞ்சாயத்துக்களில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. அரூர் பஞ்சாயத்தில், கடந்த ஜனவரி 26-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில், சிப்காட் அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மீண்டும் தீர்மானம்

    ஆனால், அவற்றின் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால், நேற்று நடந்த கூட்டத்தில், மீண்டும் அந்தத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அப்போது அங்கு இருந்த சிலர், சிப்காட் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனால், பஞ்சாயத்து தலைவர், செயலாளர், அதிகாரிகள், எந்த தீர்மானத்தையும் எழுதாமல் காலம் தாழ்த்தினர்.

    கோபம் அடைந்த பொதுமக்கள், கிராமசபைக் கூட்டம் என்பது, பொதுமக்களால் கொண்டு வரப்படும் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். அதிகாரிகள் சொல்வதை தீர்மானங்களாக நிறைவேற்றக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அதற்கு, பஞ்சாயத்து செயலாளர் ரவிச்சந்திரன், அரசு அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதை தான் எழுதுவோம் என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பஞ்சாயத்து அலுவலகம் முன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மிரட்டல்

    அதேபோல், பொது மக்களின் கோரிக்கையை தீர்மானமாக எழுத முடியாது எனக்கூறிய அரூர் பஞ்சா யத்து செயலாளர் கருப் பண்ணன், தீர்மான நோட்டை எடுத்துக் கொண்டு, அலுவலகத்துக்குள் ஓட்டம் பிடித்தார்.

    அவற்றை படம் பிடித்தவர்களின் கேமராவை பறிக்க முயன்றதுடன், அவர்களுக்கு மிரட்டல் விடுத்தார். பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக, சிப்காட்டிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றாமல், கிராமசபைக் கூட்டம் பாதியில் முடிந்தது.

    ×